Friday, 26 August 2016

Love 6


உன் வார்த்தைகளில் என் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்கிறேன்...

அந்த அர்த்தங்கள் என் அமைதியான உள்ளத்தில்
அழகான ஆசைகளை அப்படியே ஆழமாக
வரைந்து விடுகின்றது ...

வரையப்பட்ட அந்த வார்த்தைகள்
வானவில்லின் வண்ணங்களை விடவும்
வர்ணிக்க முடியாத வரிகள்...

உன் காதலில் என் கண்களின்
மொழியை உணர்கிறேன்...

அந்த காதல் தான் என் காற்றோடு
கலந்து விட்ட காவியமாகி விட்டது
கடைசி வரை காவல் இருப்பேன்
உன் காதலுக்காக மட்டும்...

உன் நினைவுகள் இல்லாமல்
என் நிழல் கூட உயிர் வாழாது...

நிஜமான என் வாழ்க்கைக்கு
என்றுமே நீ வேண்டும்
நிரந்தரமாக மட்டுமல்ல
என் நினைவுகள் உன்னை விட்டு
நீங்கி விடும் வரை...

நீ இல்லை என் நிம்மதியும் இல்லை...

Love 1


உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்....
ஆனால்,
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே

Kavithai 4


விழிகளில் சுமந்து கொண்டிருக்கும்
வலிகள் கூட
மொழிகளில் அடக்கிவிட முடியாத
கண்ணீர் துளிகளின் விம்பங்களே ...

Kavithai 3

என்னுடைய எந்தப் பெயரும்
இதுவரை இனித்ததில்லை ....
நீ சொல்லும் "செல்லம்" போல..

Love Kavithai 2


சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத
கூண்டுக்க் கிளி போல
உன் நினைவுகள் இருந்தும்
அருகில் இருக்க முடியாத
ஒரு உயிரானேன் நான்....
பல உறவுகளுக்கு மத்தியில்
உள்ளம் தேடும் ஒரே ஒரு உயிர்
நீ மட்டுமே....

காத்திருப்பு கூட ஒரு அழகான
கவிதை என்பதை
உனக்காக காத்திருக்கும் போதுதான்
உணர்கிறேன்.....
உன்னை உயிராக நேசிக்கிறேன்...
உன் வரவை வானவில் போல
வரைந்து வைத்திருக்கிறேன் ...

1. Kavithai Tamil

உன் பார்வையில் பட்ட
என் பாதங்கள் கூட
பாதையில் நடக்க மறுக்கின்றது
நீ என் அருகில் இல்லாததால்...

Thursday, 25 August 2016

சண்டை போடுவதனாலும் சரி
சமாதானம் ஆவதாக இருந்தாலும் சரி அது குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள வேண்டும்.

ஈகோ இல்லா
நல்உள்ளங்கள் குழந்தைகள் மட்டுமே.

இமைகள் தேடும் இறுதிப் பயணம்
இன்று என் இதயத்தின் இரண்டு வினாடித் துடிப்பில்
இருபது கோடி நினைவுகளுடன்
நின்று விடப்போகிறது.....

Wednesday, 24 August 2016

நீ தந்த நினைவுகளுக்கும்,
நீ வந்த பாதைகளுக்கும்,

நீ சொன்ன வார்த்தைகளுக்கும்,
நீ இருந்த நிமிடங்களுக்கும்,
நீ தந்த காயங்களுக்கும்,
இன்று என் கண்கள்,
பதில் சொல்கின்றது கண்ணீரில்...

என் காதலை உன்னிடம் சொல்ல
எனக்கு தைரியம் இல்லை....
இருந்தாலும் சொல்லிவிட
வேண்டும் என்றெண்ணி...
தினமும்
உன் பார்வை படாத தூரத்தில்
நின்று விட்டு
மௌனமாகவே திரும்புகிறேன்..

Monday, 22 August 2016

Love 8

நீ வாழும் வரை உனக்குள் நான் இல்லா விட்டாலும்...!

நான் சாகும் வரை எனக்குள் நீ மட்டும் தான் இருப்பாய்...!

வரதட்சணை

திருமணத்திற்கு முன் கேட்டு வாங்கப்படும் வரதட்சணையின் அளவை பொறுத்தே,

திருமணத்திற்கு  பின் மனைவியிடம் இருந்து பெறப்படும் அடி, உதையின் அளவும் இருக்கிறது..!....

Saturday, 13 August 2016

Real Love

ஒரு உண்மைக்
காதலனுக்கு கிடைக்கும்,

மிகப் பெரிய சந்தோஷம்....

தன் காதலி சொல்லும்
ஒரே வார்த்தை
டேய் நான் உன்
#பொண்டாட்டி_டா...

அதே போல
ஒரு உண்மைக்
காதலிக்கு கிடைக்கும்...

மிகப்பெரிய
சந்தோஷம் தன் காதலன்
சொல்லும் ஒரே வார்த்தை
#I_LOVE_YOU_செல்லக்குட்டி...

Tuesday, 9 August 2016

Eye

கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு..
கண்ணுக்கு "உலகம்" மட்டுமே தெரியும்
கண்ணீருக்கு "உள்ளமும்" தெரியும்...

Saturday, 6 August 2016

Friendship Day

நமக்கென்று
கொண்டாட ஓரு தினமாம்...

நாம் தினம் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது...

நட்பின் மடியில் அமைதியாய் உறங்கும்,
ஆயிரம் கோடியில் நானும் ஒருவன்...

முகம் காணாமல் முகவரி,
அறியாமல் இணைந்த போதும்,

முகத்தில் அழியா தடம்,
பதித்து நிலைத்துவிட்டோம்...

பலரின் பெயர் கூட தெரியாமல்
நட்பெனும் ஓரே பெயரால் வாழ்கிறோம்...

தாய்மைக்கு நிகராக நிற்கும்
நட்புக்கு ஈடு இல்லை எவ்வுலகில்...

அகவைகள் ஐம்பதை கடந்தாலும்,
துள்ளும் மழலையாய்
நமை மாற்றிடும் உறவிது...

அழும் போது ஆறுதல் சொல்ல,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
அழவே விடாத நம் நட்பில்
நாம் தொலைந்து போகின்றோம்...

😍 சதீஸ்குமார் கவியரசு. 😍

AMMA

வீட்டில் உள்ள பொருளை
"அம்மாவால்"
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்
"அது"
தொலைந்து விட்டதாக அர்த்தம்

Friday, 5 August 2016

Love 7

எவ்வளவு
எடுத்து சொன்னாலும்.....
நீ என்னை
புரிந்து கொள்வதாய் தெரியவில்லை.....
என் பிரிவு தான்
அதை உனக்கு
உணர்த்தும் என்றால்....
எனக்கு பிரிவதிலும்
தயக்கமில்லை.....
நீயே முடிவு செய்.....
புரிந்து கொள்வாயா.....
இல்லை பிரிய செல்வாயா...?

நட்பு தந்த வேதனை

உள்ளுக்குள் அழுகிறேன்,
உன் நட்பு தந்த வேதனையால்...

வெளியில் சிரிக்கிறேன்,
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக...

உன்னுடன் பழகியது சில காலம்,
உன் நினைவுகளுடன் தொடர்கிறது காலம்...

இவை அனைத்தையும் மறக்க,
நினைக்கிறேன் ஒரு கணம்...
மறு கணம் வேண்டாம்
என்கிறது, என் மனம்....

Love 7

என்னை பிடிக்கவில்லை
என்று சொல்லி விட்டு...

யாரை தேடி
வந்தாய் என் கனவில்...

Love 5

நீ என்ன தான்
காயங்கள் கொடுத்தாலும்,
உன்னை தவிர வேறு
யாரையும் பிடிக்காது...

Love 6

மறக்காமல்
நினைக்கிறேன்  உன்னை...
நினைக்கவே
மறக்கிறேன் என்னை...

ஆழத்தை அறிய முற்படுகிறது...

இதய முகவரியை...
தொலைத்த உனக்கு...
இல்ல முகவரி எப்படி...

நினைவுவரும் ....?
நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது...

உன்னை சுவாசிக்கிறேன் நீ...

நீ மௌனமாக இரு


பட்டுப்போன மரத்தில்...
அங்கங்கே பாசி...
பிடித்திருப்பதுபோல்...
உன் நினைவுகள்...
இதயத்தில் ஒட்டி...
இருக்கத்தான் செய்கிறது...
ஒவ்வொரு இரவும்...
எனக்கு வேலை உன்னை...

ஆனந்த கணம்


ஒவ்வொரு முறையும்
நீ இதுதான் என கணிக்க இயலா வியப்பைத் தந்து போகிறாய்...
பன்மடங்கு சினத்தை
பக்குவப்படுத்தி
காத்திருக்கிறேன் உன்
மீது எய்துவிட...

ஒற்றை வார்த்தை உதிர்க்கும் ...

காதல் மொழி


ஒற்றை வார்த்தையில்
ஆயிரம் பட்டாம்பூச்சிகளை
பறக்க விடுகிறாய்...
படபடக்கும் சிறகுகளோடு
உனது இராஜாங்க
எல்லைக்குள் கடத்திச் செல்கிறாய்...

உதிரிப் பூஞ்சொற்களில் தேன்...

அரிது அரிது

பரபரப்புடன்
நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் மெல்ல என் அருகில் வந்து வேண்டுமென்றே
எனை இடித்துவிட்டு
தூரம் சென்று பின் திரும்பி
பார்த்து என் முகபாவனைக்காக காத்திருந்து கோபமாகவோ அல்லது...

Love 4

நீ ஒற்றை கவிதை அல்ல,
கவிதை நூலகம் நீ....

நீ ஒற்றை பூ அல்ல,
பூந்தோட்டம் நீ....

நீ ஒற்றை நிலவு அல்ல,
ஒராரயிரம் நிலவு நீ...

எப்படியோ
எனக்கு நீ ஒருத்தி மட்டும் தான்...

Love 3

வாழும் கடைசி நிமிடம் வரை  நான் உன்னுடையவளாப் வாழ்ந்தால்  போதும் மரணம் கூட அழகான வரமாகும்...

Wednesday, 3 August 2016

குருபெயர்ச்சி

கோவில்ல எவனோ
அவன் புது செருப்ப விட்டுட்டு
என் பழைய செருப்ப மாத்தி
போட்டுட்டு போயிருக்கான்...

குருபெயர்ச்சி வொர்க் அவுட் ஆகுதுடா...

love 2

உனக்காகவே
காத்திருக்கின்றேன்...
வர மறுக்கின்றாய்...

நீ வரும் போது
ஒரு வேளை நான்
உனக்காக காத்திருக்க
முடியாமல் போகலாம்...

அன்று எனக்காக
நீ ஒரு நொடியேனும் காத்திருக்காதே...

ஏனெனில் இறந்தவர்கள்
மீண்டும் வருவதில்லை...

Tuesday, 2 August 2016

Love 1

விரும்பும் நெஞ்சம்
அருகில் இருந்தால் என்ன ,
தொலைவில் இருந்தால் என்ன?

தொலையாத நினைவுகள்
உள்ளவரை
தொலைவும் வெகு அருகில் தான்...