Thursday, 29 October 2015

உன்னால்!

உன்னால் :-

எத்தனையோ செடி 
வளர்க்கிறேன் வீட்டில் 
தினமும் நீர் ஊற்றி 
பசளை இட்டு 
சூரிய ஒளிபட வைத்து...

 
அதெப்படி 
சூரிய ஒளியில் 
பச்சையமே தயாரியாது 
என்னுள் இத்தனை 
பசுமையாக வளர முடிகிறது ...
உன்னால்!

Thursday, 15 October 2015

அடுத்த ஜென்மம்

ஒரு வருஷம் உன்னை 
பிரிந்து நான் வாழ்கின்றேன்...

உன்னை நினைத்து 
தினம் சாகிறேன்...

அடுத்த ஜென்மம் 
வரை நான் காத்திருப்பேன்... 

Tuesday, 6 October 2015

அங்கோர்வாட் கோயில்

அங்கோர்வாட் கோயில் :-

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற
தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள 

அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். 

இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான்
மிகப் பெரியது.திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின்
நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 


40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 

கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல்
சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண
முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .

இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.