தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார்.
அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார்,
‘இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க’.
அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், ‘அதோ
அங்கே தெரியுதுல்ல மேம்பாலம்,
அதுல வந்த கமிஷன வச்சி தான்
இந்த பெரிய வீட்டை கட்டினேன்...
அதன் பின் அமெரிக்கா அதிபர்
தமிழக வந்தபோது, அதே அமைச்சரின்
வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார்,
என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே,
நீங்க எப்படி கட்டுனீங்க?’. அதுக்கு அமைச்சர்,
அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..’ என்று கை காமித்தார்.
அதிபர் பார்த்துவிட்டு, ‘எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு
தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..’.
என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், ‘ஆங்..அங்க மேம்பாலம்
கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..’
என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.